Thursday, November 21, 2013

மரண வாசனை

மரண வாசனை
 
வசந்தத்தின் தடயங்களை
ருசித்தபடி
பாதங்கள் பழகிய
ரோசா தோட்டங்களைச்
சுற்றிவருகிறேன்.
 
மாமரத்து நிழலில்
கரும்பு சுவைத்து
காலம் புறககணித்து
உரையாடிய பொழுதுகள் மட்டுமே
சரித்திரத்துக்குத் தகுதியானவை.
 
தோட்டத்துக் கிணற்றில்
காட்டெலிகளும்,
ரோசாக்கள் குடியிருப்பில்
புதரும் பற்றிக்கிடக்க
படபடக்கும் மேற்காற்றுக் கடக்கையில்
மரணவாசனை சுமந்த சருகு ஒன்று
பறந்து வந்து தோளில் அமர்ந்துகொண்டது.

(c) darisingsun@blogspot.com

No comments:

Post a Comment