மரண வாசனை |
ருசித்தபடி
பாதங்கள் பழகிய
ரோசா தோட்டங்களைச்
சுற்றிவருகிறேன்.
மாமரத்து நிழலில்
கரும்பு சுவைத்து
காலம் புறககணித்து
உரையாடிய பொழுதுகள் மட்டுமே
சரித்திரத்துக்குத் தகுதியானவை.
தோட்டத்துக் கிணற்றில்
காட்டெலிகளும்,
ரோசாக்கள் குடியிருப்பில்
புதரும் பற்றிக்கிடக்க
படபடக்கும் மேற்காற்றுக் கடக்கையில்
மரணவாசனை சுமந்த சருகு ஒன்று
பறந்து வந்து தோளில் அமர்ந்துகொண்டது.
(c) darisingsun@blogspot.com
No comments:
Post a Comment